பள்ளியில் நஞ்சு வைப்பு; 60 பேர் பாதிப்பு

ஆஃப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நஞ்சு வைக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 60 மாணவிகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

சார்-இ-போல் எனும் மாநிலத்தில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றை இலக்காகக் கொண்டு இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டது. 

ஆஃப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, பதின்மவயதுப் பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதிலிருந்து, அங்கு பெண்கள் கல்விபெறுவது பெரிதும் சிரமமாகி இருக்கிறது. 

இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலர், சஞ்சராக் மாவட்டத்தில் உள்ள அந்தப் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளில் நஞ்சு வைத்ததாகவும் அதனால் வகுப்பறைக்குள் நுழைந்ததும் அந்தப் பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் காவல்துறைப் பேச்சாளர் டென் முகம்மது நஸரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ‘நல்ல நிலையில்’ இருப்பதாகவும் திரு நஸரி தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை.

இதற்கு முன்னர், அண்டை நாடான ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் நஞ்சு வைக்கும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. 

கடந்த நவம்பரிலிருந்து அங்கு இடம்பெற்ற அத்தகைய சம்பவங்களில் கிட்டத்தட்ட 13,000 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!