பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் போலிஸ் முயற்சிகளுக்கு உறு துணையாக கடைத்தொகுதிகள், மனமகிழ் மன்றங்கள், ஹோட் டல்கள் ஆகியவை தாமாகவே முன்வந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன. இந்தோனீசியாவில் மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப் பட்டதைத் தொடர்ந்து மலேசியா விலும் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது விடுமுறைக்காலமாக இருப்பதால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். "பயனீட்டாளர்களின் பாதுகாப் புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். போதுமான பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரிய கடைத்தொகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் உள்ள னர்," என்று மலேசிய கடைத் தொகுதிகள் சங்கம் தெரிவித் துள்ளது.
மலேசிய கடைத்தொகுதி, ஹோட்டல்களில் பாதுகாப்பு தீவிரம்
1 mins read

