பறவைக் காய்ச்சல்: தென்கொரியா துரித நடவடிக்கை

பறவைக் காய்ச்சல்: தென்கொரியா துரித நடவடிக்கை

1 mins read

சோல்: தென்கொரியாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அக்கிருமி தொற்றிய கோழிகளையும் வாத்துகளையும் அழிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு ஆயுதப் படையினரை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அக்கிருமி முதன் முதலில் நவம்பர் 18ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது முதல் மொத்தம் 26 மில்லியன் கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டு வருவதாக வேளாண், உணவு, கிராமப்புற விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்தது. கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு H5N6 கிருமி தொற்றியதைத் தொடர்ந்து பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.