ஏப்ரல் 13 முதல் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடவிருக்கும் அமெரிக்க ராணுவம்

ஏப்ரல் 13 முதல் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடவிருக்கும் அமெரிக்க ராணுவம்

1 mins read
ஏப்ரல் 13, சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிமுதல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவம் கப்பல்களுக்குத் தடைகள் விதிக்கவிருக்கிறது
20acb7b8-dc7d-4fc9-a1dc-0e53a870e36a
ஹோர்முஸ் நீரிணையின் அருகில் வர்த்தகக் கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிமுதல் ஈரானின் அனைத்துத் துறைமுகங்களையும் முற்றுகையிடப்போவதாகக் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் அமைதி உடன்பாடு எட்டப்படாமல் முறிந்ததை அடுத்து, அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கருத்தைத் தெரிவித்தது.

“ஈரானின் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகளில் பயணம் செய்ய அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் தடைகள் விதிக்கப்படும். அரேபியக் கடல், ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்,” என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்