வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செம்டம்பர் 7 முதல் செப்டம்பர் 10 வரை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்வார் என்றும் துணை அதிபர் கமலா ஹேரிஸ் தென்கிழக்காசிய தலைவர்கள் மாநாடுகளுக்காக செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7 வரை ஜகார்த்தா செல்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
பிரிக்ஸ் நாடுகள் ஜொஹனஸ்பர்க்கில் மாநாடு ஒன்றை நடத்தியிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் அந்தப் பயணங்கள் குறித்து அறிவித்தார்.
ஜி-20 மாநாட்டுக்கான அமெரிக்காவின் கடப்பாட்டை அதிபர் மறுஉறுதிப்படுத்துவார் என்று திரு சுல்லிவான் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதோடு 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா ஜி-20 மாநாட்டை ஏற்றுநடத்த கடப்பாடு தெரிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

