புகையிலை நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியாவிற்கு தமது சிகரெட்டுகளை விற்றுள்ளது. அதனால் நிறுவனத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை நிறுவனம் ஒப்புக்கொண்டது.
நிறுவனம் 2007ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அக்குற்றத்தை செய்துள்ளது.
குற்றத்திற்காக தாங்கள் வருந்துவதாகவும் அது கூறியது.
பாட் நிறுவனத்தின் சிகரெட்டுகள் உலக அளவில் பிரபலமானவை.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கடுமையான புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்.
கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு புகையிலை பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஐக்கிய நாட்டு அமைப்பை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு தரவில்லை.