ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்

கனடாவில் சிகரெட் பழக்கத்தைத் துடைத்தொழிக்க புது முயற்சியை கையில் எடுத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

சிகரெட் பெட்டிகளில் மட்டும் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் தெளிவாகத் தெரியும்படி அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது.

வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இது படிப்படியாக நாடு முழுவதும் நடப்புக்கு வரும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் கனடாவில் புகைக்கும் பழக்கத்தை பலர் விடுவார்கள் என்றும் அது கூறியது. 

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்துவிதமான சிகரெட்டுகளிலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிகரெட் புகை குழந்தைகளைப் பாதிக்கும், ஒவ்வொரு முறை சிகரெட் புகைப்பது விக்ஷம் அருந்துவதற்கு சமம் போன்ற வரிகள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் சிகரெட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.

கனடாவில் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 48,000 பேர் புகை பழக்கம் காரணமாக மடிகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!