தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணத்தைத் தாண்டிய உறவு இனி நியூயார்க்கில் சட்டவிரோதமல்ல

1 mins read
355b1053-497e-4be1-9fdd-2d88a6dcaad1
1972ஆம் ஆண்டிலிருந்து 13 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு, அவர்களில் ஐவரது குற்றம் நிரூபணமானது. - படம்: பிக்சாபே

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்களின் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவோர் இனி சட்டப்படி தண்டிக்கப்படமாட்டார்கள்.

ஆளுநர் கெத்தி ஹோச்சல் நவம்பர் 22ஆம் தேதி இது தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, நியூயார்க்கில் திருமணமானவர்கள் கள்ள உறவு வைத்திருந்தால் அது குற்றமாகும். 1907ஆம் ஆண்டு முதல் நடப்பில் உள்ள இந்தச் சட்டத்தின்படி, குற்றம் புரிவோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

வீட்டில் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்க, ஒருவர் வேறொருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தவறான நடத்தை தொடர்பான ‘பி’ வகை குற்றமாகக் கருதப்பட்டது.

இதன் தொடர்பாக 1972ஆம் ஆண்டு தொடங்கி 13 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஐவரது குற்றம் நிரூபணமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய திருவாட்டி ஹோச்சல், “இத்தகைய விவகாரங்கள் அந்தந்த நபர்களால் கையாளப்பட வேண்டுமே தவிர, நமது குற்றவியல் நீதி அமைப்பால் அல்ல,” என்றார்.

இதற்கிடையே, தொடர்ந்து அமெரிக்காவின் மற்ற பல மாநிலங்களில் இச்செயல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஒக்லஹோமா, மிச்சிகன், விஸ்கோன்சின் போன்றவற்றில் இது பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், வரவுசெலவு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் கள்ளத் தொடர்பு குறித்த மசோதா தாக்கல் ஆவது சரியாதனல்ல என்று அதிருப்தி தெரிவித்தார் செனட்டர் ஜோசஃப் பேட்ரிக் அடபோ.

குறிப்புச் சொற்கள்