சீனத் தற்காப்பு அமைச்சர் இரண்டாவது ஆண்டாக ஷங்ரிலா நிகழ்வில் பங்கேற்கவில்லை

சீனத் தற்காப்பு அமைச்சர் இரண்டாவது ஆண்டாக ஷங்ரிலா நிகழ்வில் பங்கேற்கவில்லை

1 mins read
16141dcd-bb84-4881-ab7c-1c2c200a0a85
சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: மக்கள் விடுதலை ராணுவத்தின் ‘நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள்’ அடங்கிய ஒரு குழுவை சிங்கப்பூரில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுப்புவதாக பெய்ஜிங், வியாழக்கிழமையன்று (மே 28) அறிவித்ததைத் தொடர்ந்து, சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன் இந்த வாரம் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாட்டார்.

சீனாவின் சார்பில், மக்கள் விடுதலை ராணுவத்தால் நடத்தப்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின், மே 28ஆம் தேதி தெரிவித்தார். 2025ஆம் ஆண்டிலும், பெய்ஜிங் இதேபோன்ற, உயர்மட்ட அதிகாரிகள் இல்லாத ஒரு குழுவை இந்த நிகழ்விற்கு அனுப்பியிருந்தது.

சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருப்பது இது இரண்டாவது ஆண்டாகும். சீன மற்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர்களுக்கு இடையே கலந்துரையாடுவதற்கு ஷங்ரிலா கலந்துரையாடல் அரிதான வாய்ப்புகளை வழங்கும். ஆனால், பெய்ஜிங் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்குத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உயர்மட்ட தற்காப்பு அதிகாரிகளை அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
தற்காப்புகலந்துரையாடல்அமைச்சர்