கரபாக் எரிபொருள் கிடங்கு வெடிப்பில் 170 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: நகொர்னோ-கரபாக்கில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பிலும் நெருப்பிலும் 170 பேர்வரை உயிரிழந்துவிட்டதாக ஆர்மன்பிரஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அசர்பைஜான் நடத்திய மின்னல்வேக ராணுவத் தாக்குதலில் ஆர்மீனிய வீரர்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கையில் வெடிப்பு ஏற்பட்டது.

வெடிப்புக்கான காரணத்தை உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, 68 பேர் உயிரிழந்ததாக கரபாக் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தனர். அந்த எண்ணிக்கை இப்போது வெகுவாக அதிகரித்துள்ளது.

வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணி தொடர்கிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நகொர்னோ-கராபாக் பகுதியில் வாழ்ந்துவந்த 120,000 ஆர்மீனியர்களில் 84,700க்கும் மேற்பட்டோர் எல்லைகடந்து ஆர்மீனியாவுக்குச் சென்றுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!