நிலநடுக்கம் உலுக்கிய வெனிசுவேலாவில் தாமதமான உதவிகள்: மக்கள் ஆதங்கம்

நிலநடுக்கம் உலுக்கிய வெனிசுவேலாவில் தாமதமான உதவிகள்: மக்கள் ஆதங்கம்

2 mins read
cd108f34-6926-4d78-aefd-f6bc04feefb2
வெனிசுவேலாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நிலநடுக்கத்தால் தரைமட்டமாகின. - படம்: ஏஎஃப்பி

எல் ஜூன்கிட்டோ: இரட்டை நிலநடுக்கத்தால் உருகுலைந்திருக்கும் வெனிசுவேலாவில் மீட்புப் பணிகள் தாமதமடைந்துள்ளதைக் கண்டு மக்கள் சினமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,700க்கும் மேல் அதிகரித்துள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 140 பேர், அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டோர் என்று நம்பப்படுகிறது. அவர்களில் பிள்ளைகளும் அடங்குவர்.

ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் வேளையில், இரட்டை நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 200 கட்டடங்கள் முழுமையாகத் தரைமட்டமாகிவிட்டன என்றும் நூற்றுக்கணக்கானவை சேதமடைந்துள்ளன என்றும் அரசாங்கப் புள்ளிவிவரங்கள் சுட்டியது.

கட்டடங்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதத்திற்கு, வெனிசுவேலாவை இதற்குமுன் ஆட்சி செய்த ஹியூகோ சாவெஸ், நிக்கலஸ் மதுரோ ஆகிய தலைவர்களே காரணம் என்றும் பலர் கருதுவதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

பல்வேறு கட்டடங்கள் சரிவர பழுதுபார்க்கப்படாமல் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டன என்றும் மோசமான கட்டுமான விதிமுறைகள் இருந்தன என்றும் மக்கள் சாடினர்.

7.2 ரிக்டர் அளவிலும் 7.5 ரிக்டர் அளவிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 5,000 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, வார இறுதிகளில் சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் எல் ஜூன்கிட்டா பகுதியில் அரசாங்க அதிகாரிகளை அதிகம் காண முடியவில்லை என்று குடியிருப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் அங்கு பாதிக்கப்பட்டோருக்கு விவசாயிகளும் பிற குடியிருப்பாளர்களும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தேவையானதை அரசாங்கம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

வேறு இடங்களுக்குச் செல்ல வழியில்லாத குடிமக்கள் திறந்த வெளிகளில் கூடாரங்கள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், அனைத்துலக அமைப்புகள் வெனிசுவேலாவுக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளன. கிட்டத்தட்ட 30 நாடுகளிலிருந்து 1,000 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன என்றும் 118 தேடல், மீட்பு நாய்களுடன் 3,600க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் களமிறங்கியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்