இந்த விமான நிலையம் வழியாகச் செல்ல கடப்பிதழ் தேவையில்லை

துபாய்: பயணிகள் கடப்பிதழ் அல்லது ‘போர்டிங் பாஸ்’ இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது துபாய் அனைத்துலக விமான நிலையம்.

புதிய உயிரளவை முறை (biometric system) அதற்கு வகைசெய்வதாக ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

அனைவருக்கும் தடையற்ற பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் விவேகமான சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை துபாய் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

உயிரளவை முறை மூலம் பயணிகளின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்பதால் அவர்கள் இனிக் கடப்பிதழை அல்லது அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிராது என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் பயணிகளின் முகம் மற்றும் கருவிழிகள் உயிரளவை முறை மூலம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அனுமதி அளிக்கப்படும்.

உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் இந்தப் புதிய முறை பொருந்தும்.

எதிர்காலப் பயணங்களுக்காக, பயணிகளின் உயிரளவைத் தகவல்கள் ‘ஜிடிஆர்எஃப்ஏ’ எனும் குடியிருப்பிட, வெளிநாட்டினர் விவகார பொது இயக்ககத்தின் கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!