தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவை நிலநடுக்கம் புதன்கிழமை (ஏப்ரல் 1) உலுக்கியிருக்கிறது.
ரிக்டர் அளவில் 5ஆகப் பதிவான அந்த நிலநடுக்கம் தோக்கியோவில் உள்ள கட்டடங்களை உலுக்கியபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இத்தகவலை உறுதிப்படுத்திய ஜப்பான் வானிலை ஆய்வு மையம், பெருநகர அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

