தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட எக்வடோர் அரசாங்க வழக்கறிஞர்

1 mins read
7cb52799-ec15-4d45-aa49-3b085b4666ac
தாக்குதலில் அரசாங்க வழக்கறிஞர் திரு மார்செலோ வாஸ்கோனேசும் அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் மாண்டனர். - படம்: இணையம்

குவீட்டோ: எக்வடோரில் அரசாங்க வழக்கறிஞர் அக்டோபர் 25ஆம் தேதியன்று துப்பாக்கிக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருடன் அவரது மெய்க்காப்பாளராக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் மாண்டார்.

எக்வடோரில் அண்மையில் தொடர்ச்சியாகப் பல வன்முறை குற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அரசாங்க வழக்கறிஞர் மார்செலோ வாஸ்கோனேஸ் மாண்டுவிட்டதாக எக்வாடோரின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவரது கொலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று எக்வடோர் காவல்துறை சூளுரைத்துள்ளது.

சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராக திரு வாஸ்கோனேஸ் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிலிருந்து எக்வடோரில் இதுவரை ஒன்பது அரசாங்க வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்