500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தையான ஆடவர் விந்து தானம் செய்ய தடை

நெதர்லாந்தில் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ள ஆடவர் இனி விந்து தானம் செய்யக்கூடாது என்ற அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) உத்தரவிட்டுள்ளது. 

ஜோனத்தன் மெய்ஜர் என்ற அந்த 41 வயது ஆடவர் தடையை மீறி விந்து தானம் செய்தால், ஒவ்வொரு விந்து தானத்திற்கும் அவர் கிட்டத்தட்ட 140,000 வெள்ளி வரை அபதாரம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 

வெளிநாடுகளில் தமது விந்துவை வாங்கி வைத்துள்ள மருத்துவ நிலையங்கள் அதை அழிக்க வேண்டும் என்று மெய்ஜர் மருத்துவ நிலையங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மெய்ஜர் தொடர்ந்து விந்து தானம் செய்வதால் அவர் விந்துவில் வந்த குழந்தைகளே  ஒருவரையொருவர் காதலிக்கும் சூழல் ஏற்படலாம் என்று விந்து தானம் பெற்ற தம்பதி வழக்குத் தொடுத்தனர்.

2017ஆம் ஆண்டு மெய்ஜர் பல பேருக்கு விந்து தானம் செய்து 100க்கும் அதிகமான பிள்ளைகள் பிறந்தன. அந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்ததால் அவர் அந்நாட்டில் விந்து தானம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் ஆடவர் வெளிநாடுகளில் விந்து தானம் செய்து வந்தார். சில நேரம் அவர் போலியான பெயர்களிலும் கூட விந்து தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!