தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ர‌‌ஷ்ய - உக்ரேனியப் போரில் முதன்முறையாகப் போலந்து நேரடித் தலையீடு

1 mins read
3086f243-7e85-4a23-80b5-ce874eb35942
உக்ரேனியப் போரில் முதன்முறையாக வார்சா ர‌‌ஷ்ய வானூர்திகளை வான்வெளியில் எதிர்கொண்டது. - படம்: ஏஎஃப்பி

வார்சா: போலந்து முதன்முறையாக உக்ரேன் மீது ர‌‌ஷ்யா நடத்தும் தாக்குதலில் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

மேற்கு உக்ரேனில் ர‌‌ஷ்யா வான்வெளித் தாக்குதலை நடத்தியது. அப்போது ர‌‌ஷ்ய வானூர்திகளை வானில் சுட்டு வீழ்த்தியதாகப் போலந்து புதன்கிழமை (செப்டம்பர் 10) கூறியது.

உக்ரேனிய எல்லைப் பகுதிக்கு மேலே போலந்து வான்வெளிக்குள் ர‌‌ஷ்ய வானூர்திகள் மீண்டும் மீண்டும் அத்துமீறியதாகப் போலந்தின் ராணுவத் தளபத்தியம் தெரிவித்தது.

நாட்டின் வான்வெளிக்குள் வானூர்திகள் நுழைந்ததை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாய்ப் பார்ப்பதாகப் போலந்து ராணுவம் கூறியது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமைந்ததால் அவற்றைச் சுட்டு வீழ்த்தியதாகப் போலந்து ராணுவம் சொன்னது.

ராணுவ நடவடிக்கை தொடர்வதாகக் குறிப்பிட்ட அது, பொதுமக்களை இல்லங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

போட்லாஸ்கியே, ம‌ஸோவியெட்ஸ்கியே, லுப்லின் ஆகியவை அதிக ஆபத்து நேரக்கூடிய வட்டாரங்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

போலந்து ராணுவம், நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் உடனடிப் பதிலடிக்குத் துணை ராணுவப் படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது.

அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் விளாடிஸ்லாவ் கோசினியாக்-காமிஸ் நேட்டோ தளபத்தியத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.

போலந்து நான்கு விமான நிலையங்களை மூடிவிட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கூறுகிறது.

போலந்து அதிகாரபூர்வமாக அந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்