விமான விபத்தில் சிக்கிய 4 சிறுவர்கள் 40 நாள்களுக்குப் பிறகு மீட்பு

விமான விபத்தில் சிக்கியவர்கள் 40 நாள்களுக்குப் பிறகு கொலம்பியாவின் அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் வயது 13,9,4,1. 

சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டது கொலம்பியாவில் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் குஸ்டாவ் பெட்ரோ தெரிவித்துள்ளார். 

மே 1ஆம் தேதி சிறுவர்களுடன் காட்டுப்பகுதிகளில் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. 

விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறுவர்களின் தாயும் விபத்தில் மாண்டனர்.

விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க அவ்வட்டார மக்களும் அதிகாரிகளும் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களுக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நேர்ததாகவும் மாண்டவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாம்புகள், சிறுத்தைகள் என பல விலங்குகள் வாழும் அமேசான் காட்டில் சிறுவர்கள் தன்னந்தனியாக 40 நாள்கள் வாழ்ந்துள்ளனர்.

சிறுவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குக் காட்டில் எப்படி வாழ்வது என்பது மரபு ரீதியாகவே தெரிந்த ஒன்று என்று அதிகாரிகள் கூறினர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!