கனடா காட்டுத் தீயை அணைக்க உலக நாடுகள் உதவி

கனடாவின் கியூபெக் பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

காட்டுத் தீயால் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி புகைமூட்டத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலையாலும் மின்னல் தாக்குதல்களாலும் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகக் காட்டுத்தீ மோசமாகியுள்ளது. 

உள்ளூர் தீயணைப்பு வீரர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.  அதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் கனடா வந்துள்ளனர்.

இதுவரை 130 தீயணைப்பு வீரர்கள் கியூபெக் வட்டாரத்திற்கு வந்துள்ளதாக கனடிய அதிகாரிகள் கூறினர்.

பிரான்சில் இருந்து மட்டும் 110 தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்தும் 100க்கும் அதிகமானவர்கள் கனடா சென்றுள்ளனர்.

அதிக அளவில் தீயணைப்பு வீரர்கள் இருந்தால் நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று கனடா தெரிவித்தது.

கியூபெக் வரலாற்றில் ஆக மோசமான காட்டுத்தீயாக இது பார்க்கப்படுகிறது. இதுவரை 280,000 ஹெக்டர் நிலபரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!