போப்புக்கு அஞ்சலி: கூட்டத்தைச் சமாளிக்க தயாராகும் வத்திகன்

2 mins read
437d36d1-096b-4f02-92c8-f8496893eb33
போப் ஃபிரான்சிஸின் நல்லுடல் வைக்கப்பட்டிருக்கும் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வத்திகன் நகர்: மறைந்த போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளை வத்திகன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) முழுவீச்சில் செய்துவருகிறது.

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குப் போப் ஃபிரான்சிஸின் நல்லுடல் திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்களும் 10 மன்னர்களும் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழ்மை, ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் ஏப்ரல் 25ஆம் தேதி ரோம் சென்றடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 130 வெளிநாட்டுப் பேராளர்கள் போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வர்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தாலிய, வத்திகன் அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். கூடுதல் சோதனைகள் இன்றிரவு இடம்பெறும் என்று காவல்துறை சொன்னது.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் வரிசையாக மணிக்கணக்காக நின்று போப் ஃபிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

போப் ஃபிரான்சிஸின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வரிசைப் பிடித்து நிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள்.
போப் ஃபிரான்சிஸின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வரிசைப் பிடித்து நிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
- படம்: ராய்ட்டர்ஸ்

பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு ஆகியவற்றுக்கான இரண்டாம் உள்துறை அமைச்சருமான மாலிக்கி ஓஸ்மான் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார்.

இறுதிச்சடங்கு முடிந்து போப் ஃபிரான்சிஸின் நல்லுடல் அவருக்கு மிகவும் பிடித்தமான ரோமின் சென்டா மரியா மஜியோரே தேவாலயத்தில் அடக்கம் பண்ணப்படும்.

ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் போப் ஃபிரான்சிஸின் கல்லறைக்குச் செல்லலாம்.

அதையடுத்து புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

80 வயதுக்குக் கீழுள்ளோர் மட்டுமே அடுத்த போப்பைத் தேர்வு செய்ய வாக்களிக்கலாம். தற்போது 135 கார்டினல்கள் அதற்குத் தகுதி பெறுகின்றனர்.

போப் ஃபிரான்சிஸுக்கு இரண்டாவது நிலையில் இருந்த இத்தாலிய கார்டினல் பியெத்ரோ பரொலின் பலரால் விரும்பப்படுபவர் என்று பிரிட்டி‌ஷ் நூல் தயாரிப்பாளர் வில்லியன் ஹில் கூறினார்.

- படம்: இபிஏ
குறிப்புச் சொற்கள்