பள்ளி விடுமுறை காலத்தில் எல்லைகளில் போக்குவரத்து நெரிசல்: ஐசிஏ

பள்ளி விடுமுறை விரைவில் தொடங்கவிருப்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கும்படி சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதன்கிழமை (நவம்.16) கூறியது. இந்த நெரிசலை 16 நவம்பர் வியாழக்கிழமை முதல் விடுமுறைக் காலமான 2024 ஜனவரி 2 வரை எதிர்பார்க்கலாம் என்றும் ஐசிஏ தெரிவித்தது.

குறிப்பாக வார இறுதிகளில் பயணிகள் குடிநுழைவு சோதனைகளை முடிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பணியில் இருக்கும் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, சாலைத் தடங்களை மீறாமல் சோதனைச் சாவடிகளைக் கடக்குமாறு ஐசிஏ கேட்டுக்கொண்டது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்துவோர், இஸ்ரேல் ஹமாஸ் போர் சார்ந்த எந்தவித உடைகள், விளம்பரப் பொருள்கள், கொடிகள் ஆகியவற்றை பொதுவில் அணியவோ, வெளிப்படுத்தவோ கூடாது.

அதிகாரபூர்வ அனுமதியின்றி வெளிநாட்டு தேசிய முத்திரைகளை பொதுவெளியில் பயன்படுத்துவது வெளிநாட்டு தேசிய சின்னங்கள் (1949) காட்சிக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி குற்றமாகும். இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் தண்டனை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐசிஏ வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!