மாண்ட இரண்டு கைக்குழந்தைகள் கண்ணாடிப் புட்டிகளில் கண்டுபிடிப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் காலியான வீடு ஒன்றின் வசிப்பறையில் துப்புரவாளர் ஒருவர் இரண்டு கைக்குழந்தைகளின் சடலங்களைக் கண்ணாடிப் புட்டிகளில் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சந்தேக நபர்களான 24 வயது ஆடவர் ஒருவரும், 22 வயது மாது ஒருவரும் கைக்குழந்தைகளின் பெற்றோர் என நம்பப்படுகிறது.

கண்ணாடிப் புட்டிகள் முப்பது சென்டிமீட்டர் உயரத்தில் இருந்தன என்றும், சடலங்களில் காயங்கள் இருந்ததற்கு எந்தவொரு வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றும் தலைமை இன்ஸ்பெக்டர் அவ் யுங் டக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைக்குழந்தைகளின் வயதையும், அவர்கள் பிறப்பிலேயே இறந்தார்களா என்பதையும் உறுதிசெய்ய, உடற்கூறாய்வுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இரண்டு கைக்குழந்தைகளும் வெள்ளிக்கிழமை காலை துவென் மன் மாவட்டத்தில், ‘மெய் ஹாங்’ கட்டடத்தில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டன.

சடலங்கள் திரவத்தில் நனைக்கப்பட்டு புட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஹாங்காங் செய்தி நிறுவனமான ‘ஆர்டிஎச்கே’ கூறியது.

இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக சடலங்களை அகற்றிய சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!