பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிலருக்கு இரவில் சரியாக உறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவில் பல கனரக லாரிக்கள் அங்கு வந்து கட்டுமானக் குப்பையைக் குவிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தக் குப்பை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படுவதாக ஜோகூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.
சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பின்னிரவில் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தங்களால் உறங்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.


