‘மனைவியின் மகப்பேற்றை நேரில் பார்த்ததால் மனநலப் பிரச்சினை’

மருத்துவமனையிடம் $880 மில்லியன் இழப்பீடு கேட்டு இந்திய வம்சாவளி ஆடவர் வழக்கு

மெல்பர்ன்: மனைவியின் மகப்பேற்றை நேரில் கண்டபின் தான் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்காக மருத்துவமனை தனக்கு ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$880 மில்லியன், ரூ.5,373 கோடி) இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் வழக்கு தொடுத்தார்.

அனில் கொப்புலா என்ற அந்த ஆடவரின் மனைவி, கடந்த 2018ஆம் ஆண்டு மெல்பர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

அப்போது, தன் மனைவி குழந்தை பெற்றெடுப்பதை நேரில் காணுமாறு அம்மருத்துவமனை தன்னை ஊக்குவித்தது அல்லது அனுமதித்தது என்று அனில் கூறினார். அவருடைய மனைவியும் பிள்ளையை நலமாக ஈன்றெடுத்தார்.

ஆயினும், அப்போது தன் மனைவியின் உறுப்புகளையும் ரத்தத்தையும் கண்டதால் தமக்கு மனநோய் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தனக்கு உரிய பராமரிப்பு வழங்கும் பொறுப்பிலிருந்து மருத்துவமனை தவறிவிட்டது என்றும் அதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி, விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபரில் அனில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அனிலின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஜேம்ஸ் கோர்ட்டன், ஒருவர்க்குப் பொருளியல் நோக்கில் இழப்பு ஏற்படாத நிலையில் இழப்பீடு கோர சட்டம் அனுமதிப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!