கர்ப்பிணி மனைவியைக் கரும்புத் தோட்டத்தில் தவிக்கவிட்டுக் கொன்ற சந்தேகத்தில் ஆடவர் கைது

இந்தோனீசியாவில் கர்ப்பிணி மனைவியைக் கரும்புத் தோட்டத்தில் தவிக்கவிட்டுக் கொன்ற சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் மார்ச் 26ஆம் தேதி நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.  

கிழக்கு ஜாவாவில் உள்ள கெடிரி பகுதிக்கு தம்மை அழைத்து செல்லுமாறு மனைவி தனது கணவரிடம் மார்ச் 26ஆம் தேதி கேட்டுள்ளார்.

இருவரும் அன்று மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மனைவிக்கும் கணவருக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.

வாகனத்தின் வேகத்தைக் குறைக்கும் படி மனைவி கூறியுள்ளார். ஆனால் ஆடவர் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த பெண் கீழே விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.

மனைவியை மீண்டும் வாகனத்தில் ஏற்றிச் சென்றார் ஆடவர். ஆனால் அப்பெண் இரண்டாவது முறையாகவும் கீழே விழுந்தார். ஆடவர் அப்பெண்ணை மீண்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்துள்ளார். 

ஒருகட்டத்தில் ஆடவர் மனைவியை செல்லும் வழியில் இருந்த ஒரு கரும்புத் தோட்டத்திலேயே விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.

மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த பெண் தோட்டத்தில் மாண்டுகிடக்க காணப்பட்டார்.

சில ஊடகங்கள் அந்த பெண் தமது குழந்தையை ஈன்றெடுத்ததாகவும் குழந்தையும் அங்கேயே மாண்டதாகவும் கூறுகின்றன.

மனைவியைத் தோட்டத்திலேயே விட்டுச்சென்றதை ஆடவர் ஒப்புக்கொண்டார். அவர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!