ஈரான்: ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வீரரைத் தாக்கிய ஆடவருக்கு மரண தண்டனை

ஈரானில் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது சாலையை மறைத்ததற்காகவும் ராணுவ வீரர் ஒருவரைக் காயப்படுத்தியதற்காகவும் 23 வயது மெஹ்சேன் ஷேக்கரி எனும் ஆடவர் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இந்நடவடிக்கை அந்நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரித்து, கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவிட்டுள்ளது. அனைத்துலக அளவிலும் இந்த நடவடிக்கைகளுக்குக் கண்டலக் குரல்கள் எழுந்துள்ளன. 

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் மேலும் பலருக்கு இதுபோன்ற மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது என்று மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன. 

ஈரானில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பெண்களுக்கான ஹிஜாப் உடை சட்டத்தை மீறி நடந்ததற்காக 22 வயது மஹ்சா அமினி எனும் 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன் அந்நாட்டின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரானில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!