தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் இஸ்லாமியப் பள்ளி இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு

1 mins read
622b33ed-9e86-4d9a-9c4e-530dd5236e47
செப்டம்பர் 29ஆம் தேதி, கிழக்கு ஜாவாவின் சிடோர்ஜோவில் உள்ள இஸ்லாமியப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் தேடுதல் பணியை மேற்கொண்ட மீட்புப் படையினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

சிடோர்ஜோ: இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிடோர்ஜோ பகுதியில் இருக்கும் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் கட்டடம் செப்டம்பர் 29ஆம் தேதி இடிந்தது.

அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் முகாரி தெரிவித்தார்.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் 38 பேரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் 102 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில், உயிருடன் மீட்கப்பட்ட 99 பேர் உட்பட உயிரிழந்த மூவரும் அடங்குவர் என அந்நாட்டுத் தேசிய தேடுதல், மீட்பு நிறுவனத்தின் தலைவர் முகமது சியாஃபி குறிப்பிட்டார்.

சம்பவத்தன்று 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற்பகல் வழிபாட்டிற்காக அக்கட்டடத்தில் கூடியதாகவும் பல மாடிகள் கொண்ட அக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாகவும் அச்சம்பவத்தை நேரில் கண்டோர் கூறியதாக அவ்வட்டாரச் செய்தி நிறுவனமான ‘அந்தாரா’ செய்தி வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்