ஜெனீவா: இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லெபனானின் தென்பகுதியில் இஸ்ரேல் வான்வழியாக நடத்திய தொடர் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லாவின் எதிர்தாக்குதலில் இஸ்ரேலியப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. இஸ்ரேலிய-லெபனானிய மோதல் அதனைக் கீழறுத்துவிடுமோ என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
சண்டை நிறுத்தம் நடப்பிலிருப்பதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிசெய்தது. இருப்பினும், உடனடி அச்சுறுத்தல்களை அகற்றும் பணிகளில் தங்கள் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர் என்று அதன் பேச்சாளர் கூறினார்.
சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல்லா இன்னும் உறுதிசெய்யவில்லை. ஆயினும், ஹிஸ்புல்லாவை அகற்றவேண்டும் என்ற திட்டம் தோல்வியடைந்ததாக அதன் தலைமைச் செயலாளர் ஷேக் கூறினார்.
சண்டை நிறுத்தம் தொடங்கிய பிறகு, லெபனானின் நபட்டியா நகரில் 12 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மீட்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானுடனான அமைதி உடன்பாட்டின் நிலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அந்தத் தாக்குதல்கள் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

