லெபனான்மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

லெபனான்மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

1 mins read
89dd0a2f-58fd-4250-b0f7-24420dc59f8d
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதலில் குறைந்தது 182 பேர் மாண்டனர். - படம்: ஏஎஃப்பி

லெபனான்: லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய ஆகாயத் தாக்குதல்களில் பலர் மாண்டனர் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததையும் அது குறிப்பிட்டது.

அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டைத் தற்காலிகமாக எட்டியுள்ள நிலையிலும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுமீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறினர்.

அது போர் நிறுத்த உடன்பாட்டைப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

லெபனானில் உள்ள நூற்றுக்கும் அதிகமான ஹிஸ்புல்லா தளபத்திய நிலையங்கள், ராணுவத் தளங்கள் ஆகியவற்றின்மீது 10 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் குறைந்தது 182 பேர் மாண்டனர் என்றும் 890 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியது. மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்