ஆறு கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

மலேசியாவில் இஸ்ரேலிய ஆடவர் கைது

கோலாலம்பூர்: துப்பாக்கிகள் வைத்திருந்த இஸ்ரேலிய ஆடவர் ஒருவரை மலேசியக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 27) கைதுசெய்தது.

கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

பிரெஞ்சுக் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்த அவரிடமிருந்து ஆறு கைத்துப்பாக்கிகளும் 200 குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த 36 வயது ஆடவர் இஸ்ரேலியக் கடப்பிதழையும் வைத்திருந்ததாகவும் பின்னர் அவர் அதனை ஒப்படைத்துவிட்டதாகவும் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் ரஸருதீன் ஹுசைன் கூறினார்.

“குடும்பத் தகராறு காரணமாக சக இஸ்ரேலியர் ஒருவரைத் தேடிக் கொல்வதற்காக மலேசியாவிற்குள் நுழைந்ததாக அந்த ஆடவர் கூறினார்,” என்று வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் திரு ஹுசைன் தெரிவித்தார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் மூன்றில் குண்டு நிரப்பப்பட்டிருந்ததாகவும் திரு ஹுசைன் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!