வடஅமெரிக்காவில் தமது பொருள்கள்மீது வழக்கு தொடுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தர ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது.
குழந்தைகளுக்கான மற்றும் பிற நறுமணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின்மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தனர்.
வாடிக்கையாளர்களிடம் சமரசமாகப் போக அந்நிறுவனம் தற்போது 9 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அது 7 பில்லியன் டாலர் தருவதாகத் தெரிவித்திருந்தது.
நிறுவனத்தின்மீது 40,000க்கும் அதிகமானவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக இருப்பதாக வழக்கு தொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டு முதல் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனையை நிறுத்தியது. கடந்த ஆண்டு உலக அளவில் அதன் நறுமணத்தூள் நிறுத்தியது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஏறக்குறைய 130 ஆண்டுகளாக நறுமணத்தூள் விற்று பெரும் லாபத்தை ஈட்டி வந்தது.