சோதனைச் சாவடிகளில் 250 அதிகாரிகளைப் பணியமர்த்தும் ஜோகூர்

நெரிசலைக் குறைக்க குறுகியகால தீர்வுகளில் இதுவும் ஒன்று

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் சிங்கப்பூருடான எல்லைகளில் பணியாற்றுவதற்காக கூடுதலாக 250 குடிநுழைவு அதிகாரிகள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

வரும் செப்டம்பர் மாத்திற்குள் அந்த 250 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.

வியாழக்கிழமை (ஜூன் 15) சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி இதனை அறிவித்தார்.

கூடுதலாக 100 அதிகாரிகள் எல்லைப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 250 குடிநுழைவு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஐகியூ மற்றும் இஸ்கந்தர் புத்தேரியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நெரிசலைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு ஜோகூர் முதல்வர் பதிலளித்தார்.

ஜோகூர் மேம்பாலத்திலும் இரண்டாவது பாலத்திலும் நெரிசலைக் குறைக்க கூடுதலாக அதிகாரிகளை பணியமர்த்துவது குறுகியகால நடவடிக்கைகளில் ஒன்று என்று முதல்வர் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!