தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருடனான பொருளியல் திட்டத்தை மெருகேற்ற உபரி எரிசக்தி: அன்வார்

1 mins read
cf7e1756-c5da-4320-82e0-5c5cf47f2c6d
ஜோகூரில் நடந்த முதலீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்கந்தர் புத்ரி: முக்கியமான, புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மலேசியா போதுமான உபரி எரிசக்தியை உருவாக்கி வருவதாகவும் அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வகைசெய்வதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

சிங்கப்பூருடனான சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டம் தொடர்பில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதாக ஜோகூரில் நடந்த முதலீட்டு நிகழ்வு ஒன்றில் அவர் சொன்னார்.

சிங்கப்பூருக்கு வடக்கே உள்ள மலேசியாவின் தென் ஜோகூர் மாநிலத்தில் இந்தச் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை ஆண்டிறுதிக்குள் உறுதிப்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

மக்கள் மட்டுமன்றி சரக்குகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதுடன் முதலீடுகளை ஈர்க்கவும் இத்திட்டம் உருவாகி வருகிறது.

மலேசிய அரசாங்கம் தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள், எரிசக்தி உருமாற்றத் திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முயலும் என்றார் திரு அன்வார்.

தரவு மைய வளாகங்களில் பேரளவிலான முதலீட்டை அண்மைய ஆண்டுகளாக ஈர்த்துள்ள நிலையில், எரிசக்திக்கான தேவை அதிகரிப்பதை எதிர்பார்த்த வண்ணம் உள்ளது ஜோகூர்.

முதலீடுகள் அதிகரித்துள்ளதால் மலேசியாவின் பொருளியலும் இவ்வாண்டு மேம்பட்டதாக திரு அன்வார் சுட்டினார்.

பொருளியல் வளர்ச்சியைத் தவிர மலேசியப் பங்குச் சந்தையும் வட்டாரத்திலேயே ஆகச் சிறப்பாகச் செய்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்