தேர்தல் முடிந்த கையுடன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார் ஜோர்தானியப் பிரதமர்

1 mins read
6c0aaa34-7343-4641-9dbc-d3b6c54d979b
ஜோர்தான் தலைநகர் அம்மானில் 2024 மார்ச் 17ஆம் தேதி அந்நாட்டுப் பிரதமர் பிஷர் அல் கசாவ்னேவை (இடது) சந்திக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

அம்மான்: ஜோர்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஒருவாரம்கூட முடிவடையாத வேளையில், பிரதமர் பிஷர் அல் கசாவ்னே பதவி விலகல் கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) சமர்ப்பித்ததாக விவரமறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாமன்னர் அப்துல்லாவின் அலுவலகத் தலைவரும் முன்னாள் திட்டமிடுதல் அமைச்சருமான ஜாஃபர் ஹசான், பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு கசாவ்னே, 2020 அக்டோபரில் பிரதமர் பதவியேற்றார்.

காஸா போர் காரணமாக ஜோர்தானின் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை மட்டுப்படுத்துவதில் நிலவும் சவால்களை ஹசான் எதிர்கொள்ள வேண்டும். முதலீடு செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும் சுற்றுப்பயணத்துறை கண்ட வீழ்ச்சியாலும் ஜோர்தானின் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்