முடிசூடினார் மூன்றாம் சார்ல்ஸ்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்சுக்கு மே 6 முடிசூட்டு விழா நடைபெற்றது. இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முடிசூட்டு விழா அது. விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்டனர்.

74 வயதாகும் மன்னர் சார்ல்சுக்கு 360 ஆண்டுப் பழமையான செயிண்ட் எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்பட்டது. 

அப்போது அவர் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். 

இங்கிலாந்தில் அரசர் அல்லது அரசிக்கு முடிசூட்டும் பழக்கம் 1066ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 1937ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தின் அரச பதவியில் ஆண் ஒருவர் முடிசூடிக்கொள்வது இதுவே முதல்முறை.

மன்னரை மணந்தவர் என்ற முறையில், அவரது இரண்டாம் மனைவியான கமிலா, 75, மகுடம் சூட்டப்பட்டார்.

மன்னர் சார்ல்சின் முடிசூட்டு விழாவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டார். அரச தம்பதிக்கு நல்வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில் சிங்கப்பூருக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 200 ஆண்டுக்கால வரலாற்றுப் பிணைப்பு இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் லீ சியன் லூங் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவுவதைச் சுட்டினார். இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!