தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் மலேசியா

1 mins read
f290884a-63c8-4af6-b31d-37d72c906ea6
எதிர்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர மேலும் நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரவுள்ளதாக ர‌ஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 22 முதல் 22ஆம் தேதி வரை கசான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 35 நாடுகள் விண்ணப்பம் செய்ததாக ர‌ஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன.

“மாநாட்டின் நோக்கம் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவடையச் செய்வது, அது தற்போது வெற்றிகரமாக நடந்துள்ளது. இணைக்கப்படும் நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் அனுப்பட்டுள்ளன,” என்று ர‌ஷ்ய அதிகாரி யூரி உ‌‌ஷகோவ் தெரிவித்துள்ளனர்.

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் சேர ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதனையடுத்து, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர மேலும் நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களும் அமைப்பில் இணைவார்கள் என்றும் யூரி உ‌‌ஷகோவ் கூறினார். 20க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரே மாதிரியான சிந்தனைகள் கொண்ட நாடுகள் ஒன்றாக செயல்படுவது சிறப்பு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
பிரிக்ஸ்ர‌ஷ்யாமலேசியா