கோலாலம்பூர்: 1எம்டிபி கடனை அடைக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான 39.74 பில்லியன் ரிங்கிட் (S$12.07 பில்லியன்) மானியத்தை மலேசிய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆக அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி தொடர்பாக 11 ஆண்டுகள் கழித்து மலேசிய அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டரசு கடன் நிர்வாகத்தை மேம்படுத்த, மலேசிய அரசாங்கம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று நிதி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


