மெல்பர்னில் வெப்பக் காற்று பலூனிலிருந்து விழுந்து ஆடவர் மரணம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

காலை 7.30 மணிவாக்கில் பிரெஸ்டனில் உள்ள ஆல்பர்ட் ஸ்திரீட்டிற்கு வரும்படி அவசரச் சேவைக்கு அழைப்பு வந்ததாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவித்தன.

சம்பவத்தைத் தொடர்ந்து, பலூன் யாரா பெண்ட் பூங்காவில் தரையிங்கியது.

அந்த வெப்பக் காற்று பலூன் மெல்பர்னின் வடபகுதியிலிருந்து கிளம்பி, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் காற்றில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த ஆடவர் பலூன் கூடையிலிருந்து கீழே விழுந்தார்.

அவரது உடல் குடியிருப்பு அக்கம்பக்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று விக்டோரியா காவல்துறை கூறியது.

பலூனைச் செலுத்தியவரிடமும் அதில் இருந்த மற்றப் பயணிகளிடமும் விசாரித்து வருவதாகவும் அது தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!