மலேசியப் பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறை

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபைஸல் முகம்மது என்ற அந்த ஆடவர், கடந்த ஆண்டு டிக்டாக் சமூக ஊடகம் வழியாகப் பிரதமர் அன்வாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.

‘பிஎம்X’ஐயும் மற்ற அமைச்சர்களையும் சுட முன்வருவோருக்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் தருவதாகக் கூறி, ஃபைஸல் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

அன்வார் மலேசியாவின் பத்தாவது பிரதமர் என்பதால் அவர் ‘பிஎம்X’ எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறார்.

காணொளியைத் தொடர்ந்து, ஃபைஸல்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் அக்காணொளி அகற்றப்பட்டதாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி கூறியது.

நீதிமன்ற விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஃபைஸல்.

ஆயினும், தன் குடும்பத்தையும் உடல்நலமில்லாத தாயாரையும் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், தன்மீது கருணை காட்டுமாறும் தண்டனையாக அபராதம் விதிக்குமாறும் அவர் மன்றாடினார்.

அதே நேரத்தில், அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!