சோல்: தென்கொரியாவில் ஏறத்தாழ 33.3 விழுக்காடு ஆண் சிறுவர்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளானாலும் அதனைப் பற்றி புகாரளிக்க முன்வருவதில்லை.
மேலும் அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருந்துவிடுகின்றனர் என்று சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் உள்ளுர் சமூக சேவை குழு மேற்கொண்ட அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாலின சமத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இடம்பெற்ற பொதுக் கருத்துக் கணிப்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளை மனித உரிமைக்கான இசிபிஏடி ( ECPAT) என்ற அனைத்துலக அமைப்பு வெளியிட்டது.
அதன் விவரங்களை தென்கொரிய குடும்ப, பாலின சமத்துவ அமைச்சு உறுதிப்படுத்தியது.
பதின்ம வயது சிறுவன்கள் உட்பட்ட சிறு வயது ஆண்களிடம் நடந்த ஆய்வில் 27 விழுக்காட்டினர் பிறரிடம் நடந்ததைச் சொல்வது ஆண்மைக்கு உகந்தது அல்ல எனவும் அப்படி வெளியில் சொன்னால் தாங்கள் உதவி நாடும் சக்தியிழந்த பலவீனம் ஆனவர்களாகக் கருதப்படுவர் என்றும் குறிப்பிட்டனர்.
தென்கொரியாவின் மின்னியல் குற்றங்களுக்கான ஆதரவு நிலையம் வழங்கியத் தரவுகளின்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண் சிறுவர்களின் எண்ணிக்கை 2023ல் 2,320 ஆக இருந்து 2025ல் 2,618 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மொத்த சிறுவர்களில் அது கால் விழுக்காடு எனவும் நிலையம் தெரிவித்தது.

