லண்டன்: கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக வந்த தகவலை அடுத்து, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடல்துறை அமைப்பு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கையை ஜூன் 25ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தியது.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் குறித்த அச்சங்களை இந்நடவடிக்கை மீண்டும் தூண்டியுள்ளது.
தாம் அங்கீகரிக்காத வழித்தடங்களில் கப்பல்கள் செல்வதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களிலேயே, ஓமன் அருகே ஏவுகணை பாய்ச்சப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தக் கப்பலின்மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் இருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

