ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்; தாய் மீது வழக்கு

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஆறு வயது சிறுவன் தனது பள்ளி ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளான்.

சிறுவன் தமது பள்ளி பையில் வைத்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளான், ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது  சுட்டுள்ளான். அதில் ஆசிரியரின் கையிலும் நெஞ்சிலும் காயம் ஏற்பட்டது. 

சம்பவம் தொடர்பாகச் சிறுவனின் தாயார் மீது  திங்கட்கிழமை (ஜூன் 5) குற்றஞ்சாட்டப்பட்டது. 

தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். 

அந்தப் பெண் போதைப்பொருள் பயன்படுத்தியது, பொய் சொல்லி துப்பாக்கி வாங்கிய குற்றங்களை செய்துள்ளார்.   

தாய்க்கும் துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  அந்த பெண்ணிற்கு தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவனிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது தெரியவில்லை. 

காயமடைந்த ஆசிரியை 40 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!