அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஆறு வயது சிறுவன் தனது பள்ளி ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளான்.
சிறுவன் தமது பள்ளி பையில் வைத்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளான், ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது சுட்டுள்ளான். அதில் ஆசிரியரின் கையிலும் நெஞ்சிலும் காயம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாகச் சிறுவனின் தாயார் மீது திங்கட்கிழமை (ஜூன் 5) குற்றஞ்சாட்டப்பட்டது.
தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
அந்தப் பெண் போதைப்பொருள் பயன்படுத்தியது, பொய் சொல்லி துப்பாக்கி வாங்கிய குற்றங்களை செய்துள்ளார்.
தாய்க்கும் துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணிற்கு தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுவனிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
காயமடைந்த ஆசிரியை 40 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.