வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்க தடை

சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.

அப்படிக் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகள் (சிஎல்கியூ) அல்லது வணிக வட்டாரங்களுக்கு இடமாற வேண்டும் என்று மாநில உள்ளூர் அரசாங்க மேம்பாடு, வீடமைப்பு, போக்குவரத்துக் குழுவின் தலைவர் ஜே. அருள் குமார் தெரிவித்துள்ளார்.

பண்டார் பாரு நிலாய், லாட்ஜ் ரெசிடன்ஸ் பகுதியில் உள்ள ஒரு சிஎல்கியூ விடுதிக்குத் தான் சென்று பார்வையிட்டதாகவும் அங்கு 3,500 ஊழியர்கள் தங்கும் வகையில் 1,000 அறைகள் உள்ளதாகவும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 29) திரு அருள் கூறினார்.

ஏற்கெனவே 20-30 நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை லாட்ஜ் ரெசிடன்ஸ் பகுதிக்கு இடமாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிஎல்கியூ விடுதிகளை அமைக்க பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்றும் அவர்களுக்கு மாநில அரசு உதவும் என்றும் திரு அருள் சொன்னார்.

இதன்மூலம், குடியிருப்புப் பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தொல்லை கொடுப்பது முடிவிற்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!