மலேசியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு அதிகரிப்பு

புத்ராஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6,796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய வாரத்தில் அது 3,626ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் உட்பட சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் 100,000 பேருக்கு மூவராக இருப்பதாவும் 100,000 பேரில் ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு, டிசம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்டதாக பெர்னாமா கூறியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.8 விழுக்காடாக இருந்தது எனக் கூறப்பட்டது.

அதேநேரம் ஆபத்தான நிலையில் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இதர நோயாளிகளின் எண்ணிக்கை 1.1 விழுக்காடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மலேசியாவில் புதிய கொவிட்-19 கிருமி திரிபு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உள்நாட்டில் பரவும் திரிபுகள் அதிகம் தொற்ற கூடியவை அல்லது தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கானஅறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சுகாதார அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!