அக்டோபரில்தான் மலேசிய வானம் தெளிவடையும்

அக்டோபரில்தான் மலேசிய வானம் தெளிவடையும்

1 mins read
e833d976-222e-4d65-a4b3-f0a7005a3c3f
சுமத்ராவிலும் கலிமந்தானிலும் நிலம் எரிக்கப்பட்டாலும் மலேசியாவின் வானம் அக்டோபரில் தெளிவடையும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியர்கள் தெளிவான வானத்தைக் காண அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

2019ஆம் ஆண்டின் பெரிய புகைமூட்டச் சம்பவத்தைப் போலவே தற்போதைய சூழ்நிலையும் உள்ளது என்றும் பருவகாலக் காற்றின் போக்கில் ஏற்படும் மாற்றம் இறுதியில் மலேசியாவின் வானிலை நிலையை மேம்படுத்தும் என்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளரான அஸிஸான் அபு சமா கூறினார்.

“2019ஆம் ஆண்டைப் போலவே அக்டோபர் மாதத்தில் காற்று தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசாது என எதிர்பார்க்கப்படுவதால், அப்போது தெளிவான வானம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன,” என்று ஆகஸ்ட் 29ஆம் தேதி அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

சுமத்ரா மற்றும் கலிமந்தானில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தாலும், காற்று வீசும் திசையில் ஏற்படும் மாற்றம் ஏற்படுவதால் புகையின் போக்கு மாறிவிடும். இதனால் மலேசியாவின் வானம் தெளிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மலேசியா தற்போது செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தைச் சந்தித்து வருகிறது. அதைத் தொடர்ந்து பருவமழை இடைக்காலமும், நவம்பர் முதல் மார்ச் வரை வடகிழக்கு பருவமழைக் காலமும் நிலவும்.

இந்தப் பருவகால மாற்றம் காற்று வீசும் திசையில் மாற்றத்தைக் கொண்டுவரும்.

“வானிலையியலில் காற்று எந்தத் திசையை நோக்கி வீசுகிறது என்பதைப் பயன்படுத்தாமல், எந்தத் திசையிலிருந்து வீசுகிறது என்பதையே நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்,” என்றார் அஸிஸான்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவானிலைபுகைமூட்டம்