தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் மிகப்பெரிய இந்திய உணவங்காடி திறப்பு

1 mins read
6ef7dfcc-5fd4-4ba1-8c15-781e5a9614b0
மலேசியாவின் ஆகப்பெரிய உணவங்காடியாக விருந்து அமையும் என்று கூறப்படுகிறது. - கோப்புப் படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆகப் பெரிய இந்திய உணவங்காடியான ‘விருந்து’ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) திறக்கப்பட்டுள்ளது.

செராஸ் வட்டாரத்தில் ஜாலான் நக்கோடா யூசோஃபில் அமைந்துள்ள இந்த உணவங்காடி, மலேசியாவிலுள்ள இந்திய உணவகத் தொகுதிகளிலேயே ஆகப் பெரியது என்று நம்பப்படுகிறது.

‘டசாதி அரோமா’ எனும் நிறுவனத்தில் இந்த உணவங்காடியில், மொத்தம் 26 இந்திய உணவுக் கடைகள் உள்ளன.

அங்கு 200க்கும் மேற்பட்ட இந்திய உணவு வகைகளோடு, சீன, மலாய், மேற்கத்திய உணவு வகைகளும் கிடைக்கும்.

ஏறத்தாழ 250 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வசதியைக் கொண்ட இந்த உணவங்காடியில் கிட்டத்தட்ட 60 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதியும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்