பாகிஸ்தானில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி

லாகூர்: மத்திய பாகிஸ்தானில் மார்ச் 12ஆம் தேதி 3 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிர் இழந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறினர். 

தீயணைப்பு, மீட்புக் குழுவினர், தகவல் அறிந்ததும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஒன்பது பேர் உயிர் இழந்த நிலையிலும், இரண்டு பேர் படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்தக் கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயுக் கலன் ஒன்று வெடித்ததே, கட்டடம் இடிந்துவிழுந்ததற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கட்டடங்கள் இடிந்துவிழுவது பொதுவாக நடக்கக்கூடியது. அங்குத் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்படுவதாக பல குறைகூறல்கள் எழுந்துள்ளன. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!