பெர்சத்து கட்சியுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டது பாஸ்

பெர்சத்து கட்சியுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டது பாஸ்

1 mins read
a6fbfb6c-fa4d-4d29-8972-f6ccbaee4d2c
மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் (இடது) தலைமையிலான பெர்சத்து கட்சியுடனான கூட்டணி உறவைத் தமது கட்சி முறித்துக்கொள்வதாகப் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் எதிர்க்கட்சியான ‘பாஸ்’, பெர்சத்து கட்சியுடனான அரசியல் கூட்டணியை அதிகாரபூர்வமாக முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை (ஜூன் 8 ) மாலை நடைபெற்ற பாஸ் கட்சியின் மத்தியச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இந்த அதிரடி முடிவை அறிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழல், ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் பெர்சத்து கட்சியுடனான அனைத்து அரசியல் ஒத்துழைப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கொள்கை மற்றும் சட்ட அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்குக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் திரு அப்துல் ஹாடி கூறினார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் முக்கியத் தூண்களாக விளங்கிய பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையே கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் தலைதூக்கத் தொடங்கின.

எனினும், கூட்டணியைத் தக்கவைக்க விரும்புவதாகப் பெர்சத்து கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில், மாநிலத் தேர்தல்கள் மற்றும் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இஸ்லாமியர்களுக்கு இடையிலான ஒற்றுமை உணர்வை அடிப்படையாகக் கொண்டு புதியதொரு தேர்தல் உடன்பாட்டைப் பாஸ் கட்சி இனி ஆராயும் என்று திரு அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதேர்தல்பாஸ் கட்சிபெர்சத்து