மான்ட்ரியால்: தரவுகள் கசிந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியானதை அடுத்து, அதன் தொடர்பில் ஐக்கிய நாடுகள் (ஐநா) பொதுப் போக்குவரத்து அமைப்பு விசாரித்து வருகிறது.
தனது பதிவுகளில் பத்தாயிரக்கணக்கானவை திருடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த விசாரணை நடைபெறுவதாக அமைப்பு கூறியது.
அந்தத் தரவுக்கசிவுச் சம்பவம், அனைத்துலக அமைப்புகளைக் குறிவைக்கும் தீங்கு விளைவிப்போருக்கக்கூடியவர்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கனடாவில் தளம் கொண்டுள்ள அனைத்துலகப் பொதுப் போக்குவரத்து அமைப்பு தனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமைப்பிடமிருந்து 42,000 பதிவுகள் திருடப்பட்டுவிட்டதாக ஊடுருவிகள் தளம் ஒன்றில் வெளியான தகவலின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதை அமைப்பு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது. அது பற்றி மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.
“விசாரணையின் இந்தத் தொடக்கக் கட்டத்தில், எங்களால் சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களையோ சம்பந்தப்பட்ட தரவுகள் பற்றி குறிப்பிட்ட தகவல்களையோ வழங்கமுடியாது,” என்று அமைப்பு கூறியது.
193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அந்த அமைப்பு, 2016ஆம் ஆண்டில் நடந்த ஊடுருவல் நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டது. அதன் பிறகு, தனது பாதுகாப்பிற்குக் கணிசமான மேம்பாடுகளைச் செய்ததாக அது தெரிவித்தது.