சாகாய்ங், மியன்மார்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் கர்ப்பிணிகள் ஆபத்தான பிரசவத்தை எதிர்நோக்குகின்றனர்.
அங்கு ராணுவத்திற்கும் 2021ஆம் ஆண்டு ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்க்கும் குழுக்களுடன் இணைந்துள்ள இனவாத ஆயுதம் ஏந்திய அமைப்புகளுக்கும் இடையே கடும் சண்டை நிலவுகிறது.
சண்டை காரணமாக, ராணுவத்தின் திடீர் சோதனைகளுக்கும் தாக்குதல்களுக்கும் கிராமவாசிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டி உள்ளது.
எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துமனைக்குச் செல்லமுடியாத திருவாட்டி மா லா மே தமது கர்ப்பக் காலத்தின்போது வெறும் சோற்றையே சாப்பிடவேண்டியிருந்தது. அவரால் தேவையான மருந்துகளையும் பெறமுடியவில்லை.
“என்னால் போதுமான அளவு தூங்கமுடியவில்லை. தூங்க முடியாததால் இங்குள்ளவர்கள் மிகவும் சோர்வடைகின்றனர்,” என்றார் 38 வயதான அவர்.
ராணுவத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து ஓடும் கர்ப்பிணிகள் பலருக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது.
பெரும்பாலான நேரங்களில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படும் அவர்கள் காட்டுப் பகுதிகளில் குறைவான மருத்துவக் கவனிப்புடன் ஆபத்தான பிரசவத்தை எதிர்நோக்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணல் செய்த தொண்டூழிய மருத்துவ அதிகாரிகள் கூறினர்.