குச்சிங்: சரவாக் மாநிலத் தலைநகர் குச்சிங்கில் வீசிய புயல் அந்த மாநிலத்தின் துணை முதல்வரின் வீட்டுக் கூரையைத் தூக்கி வீசியது.
டாக்டர் சிம் குய் ஹியெனின் குடும்ப வீட்டுக்கு இந்நிலை ஏற்பட்டது. குச்சிங்கின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) புயல் வீசியது.
தமது வீட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருந்ததை நினைத்துத் தாம் நன்றியுடன் இருப்பதாக டாக்டர் சிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது தாம் பிந்துலு பகுதியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


